விசாரணைக்கு சென்ற முன்னாள் போராளி கைது!

முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ. அரவிந்தன் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் முகப்புத்தக பதிவு தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் செல்ல்லவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (26) மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு சென்ற நிலையில் விடுதலைப்புளிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கைதானவரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துளதாகவும் கூறப்படுகின்றது.