மனித பாவனைக்கு உதவாத 10 ஆயிரம் கோதுமை மா மூடைகள் மீட்பு!

சுமார் 15 கோடி ரூபா பெறுமதியுடைய மனித பாவனைக்குதவாத 10 ஆயிரம் கோதுமை மா மூடைகளை கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கனேவல்பொல பிரதேசத்திலுள்ள பெரிய களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கோதுமை மா கைப்பற்றப்பட்டுள்ளது.

பூச்சிகளை விரட்ட கிருமிநாசினி 

கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு உதவாத காலாவதியான கோதுமை மா மூடைகள் சந்தையில் விற்பனைசெய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருப்பதாகச் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குத் இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, குறித்த களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 25 மற்றும் 50 கிலோ நிறையுடைய மூடைகளில் மனிதபாவனைக்குதவாத கோதுமை மா கைப்பற்றப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.