வவுனியா வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (06-04-2024) வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,

அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்று கொண்டிருந்த ரயில் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடவையினை கடக்கமுற்பட்ட கெப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் கெப் ரக வாகனம் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த விபத்தில் ரயிலின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து பயணிகள் இறக்கப்பட்டு மற்றொரு ரயிலில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை, குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.