வெற்றிலை உடம்பிற்கு நன்மையா? தீமையா?

வெற்றிலை போடுவதால் நன்மை மற்றும் தீமைகள் இரண்டும் உள்ள நிலையில், அவை என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மருத்துவத்தில் வெற்றிலையின் பங்கு அளவிடமுடியாததாக இருக்கின்றது. ஆம் வெற்றிலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மருந்தாக பயன்படுத்த உதவுகின்றது.

வெற்றிலையில் உள்ள முக்கிய வேதிப்பொருள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்த உதவுகின்றது.

வெற்றிலையை சூடேற்றி மூட்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைந்து நிவாரணம் அளிக்கின்றது.

தீமைகள் என்ன?
வெற்றிலையில் உள்ள ‘அர்கோலைன்’ என்ற வேதிப்பொருள் வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாயில் புற்றுநோயை ஏற்படுத்தும்.

வெற்றிலை போடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பும் அதிகரிக்கின்றது.

பற்களை கறைபடுத்துவதுடன், ஈறுகளில் பாதிப்பும், வாயில் புண்களையும் ஏற்படுத்துகின்றது.

மேலும் பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.

வெற்றிலை போடுவதால் சில நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகள் அதிகமாகவே இருக்கின்றது. எனவே, வெற்றிலையை அளவோடு பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும்.