இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் டெங்கு நோயால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரியில் 10,417 டெங்கு நோயாளர்களும் பெப்ரவரியில் 6,007 டெங்கு நோயாளர்களும் மார்ச்சில் 3,615 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் 7,211 டெங்கு நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 4,215 டெங்கு நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 1,585 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.