பரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!

பரீஸில் அடுக்குமாடிக் தீ விபத்தில் 3 பேர் மூவர் உயிரிழப்பு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று (8) இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை முற்றுமுழுதாக அணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.