கனடாவில் மாயமான கனேடிய குடும்பம் தொடர்பில் வெளியாகிய தகவல்கள்

கனடாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட குடும்பம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தாயும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய அல்பேர்ட்டா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த குடும்பம் தொடர்பில் கடந்த ஒரு மாத காலமாக எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குடும்பத்தை பொலிஸாரும் பொதுமக்களும் தேடிவந்த நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிள்ளைகள் பாடசாலைக்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குடும்பம்மொன்று வீடு, வாகனம் என்பனவற்றை கைவிட்டு விட்டு ஒரு மாத காலம் தலைமறைவாவது சாதாரண செயல் கிடையாது என பொலிஸார் தெரிவின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.