பிரித்தானியாவில்  12 இந்தியர்கள் அதிரடி கைது!

பிரித்தானியாவில் மிட்லேண்ட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் 7 ஆண்கள் கைது செய்யப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தியர்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று அருகேயுள்ள கேக் தயாரிக்கும் ஆலை ஒன்றில் நடந்த சோதனையின்போது, 4 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு வீட்டில் நடந்த சோதனையில் பெண் ஒருவரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் ஆவர்.

விசா நடைமுறை விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களில் 4 பேரை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்ற அல்லது இந்தியாவுக்கு நாடு கடத்துவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 

மற்ற 8 பேரும் உள்துறை அலுவலகத்திற்கு இந்த தகவலை பற்றி அடிக்கடி தெரிவித்து வந்துள்ளனர். அதனால், அவர்கள் பிணையில் விடப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரித்துள்ளனர்.