ஜே.வி.பி தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

கொழும்பு (Colombo) – பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியின் தலைமையகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்றையதினம் (29.04.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அண்மையில் கலந்து கொண்டிருந்த ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே என்பவர், தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

புதிய மக்கள் முன்னணி

பெண்கள் மீதான அத்துமீறல் குற்றவாளிகள், கொலைகாரர்கள், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டோரே 1988 – 1989ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாகக் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நளின் ஹேவகே தெரிவித்திருந்தார்.