யாழில் பெரும் சோகம் ஓய்வு பெற்ற பல்கலை உத்தியோகஸ்தர் பரிதாப மரணம்!

யாழ் புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த அசம்பாவித சம்பவம் நேற்றையதினம் (06-05-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் திருநெல்வேலி, கலாசாலை வீதியில் வசிக்கும் 61 வயதான முத்து சிவலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தின் போது காயமடைந்த அவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.