காதலியை பார்க்க சென்று சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞனின் தொடர்பில் அதிர்ச்சி!

தனது காதலியை பார்ப்பதற்காக சென்ற நிலையில், காணாமல் போன குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலேயே குறித்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் காணாமல் போனதை தொடர்ந்து காதலியின் குடும்பத்தினர் காணாமல் போயிருந்தனர்.

காதலி கர்ப்பமானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதனையடுத்து நேற்றையதினம் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.