பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700/= வழங்கப்பட வேண்டும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700/= வழங்கப்பட வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ராஜகிரியவிலுள்ள சங்கத்தின் காரியாலயத்தில் இன்று (08) நடைபெற்றது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வர்த்தமானியை கம்பனிகள் மதித்து தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். நான்கு வருடங்களாக சம்பள உயர்வை வழங்கமால் இருந்து மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அநீதி.

மே மாதம் முதலாம் திகதி தோட்டதொழிலாளர்களுக்கு 1,700 சம்பளத்தை அறிவித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து வரத்தமானியில் ஜனாதிபதி 1,700 ரூபா சம்பளம் மேற்படி எடுக்கப்படுகின்ற ஒரு கிலோவிற்கு 80 ரூபா என்பதை தௌிவாக தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.