சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பரவல்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (2024.05.13) மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல் தாக்கியுள்ளது.

அத்துடன் மின்னல் தாக்கம் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.