பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது..

வேல்முருகன்
தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் வேல்முருகன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். சென்னையில் விருகம்பாக்கம் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அந்த பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் இடத்தில் வேல்முருகன் தனது காரில் கொண்டிருந்தபோது அங்கிருந்த மெட்ரோ ரயில் நிலைய அதிகரிக்கும் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைது
இந்த வாக்குவாதத்தின் போது மெட்ரோ நிலைய அதிகாரியை வேல்முருகன் தாக்கிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்துள்ளார்களாம். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.