முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து முன்வைத்துள்ளன

மேலும், இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.