தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

அத்துடன் , கடும் மழையினால் பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக நேற்று (17) இரவு மூடப்பட்ட எல்ல – வெல்லவாய பிரதான வீதி இன்று (18) மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.