தமிழினப்படுகொலை நினைவு நாளை அனுஷ்டித்த கனேடிய பிரதமர்

தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் தமிழர் தாயகம் உட்பட பல சர்வதே தரப்புக்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கனேடிய அரசியலின் முக்கிய பிரதிநிதியும் சுகாதார அமைச்சருமான மார்க் ஹொலண்ட்டினாள் (Mark Holland) அவரது அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவில் வெளியாகியுள்ளது.

தமிழ் இனப்படுகொலை
இது தொடர்பில் அவர் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

”தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், முள்ளிவாய்க்கால் மற்றும் இலங்கையில் ஆயுதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்பதோடு, கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடன் இந்த அர்த்தமற்ற வன்முறையின் தாக்கத்துடன் தொடர்ந்து வாழ்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இலங்கை உட்பட சர்வதேச தரப்புகளினால் நினைவூகூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.