தென்னிலங்கை விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாப மரணம்!

காலியில் பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றையை தினம் (23-05-2024) மாலை புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து ரயில் கடவையின் பாதுகாப்பற்ற சமிஞ்சை காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்களே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கடவையில் உரிய முறையில் சமிஞ்சை செயற்படவில்லை என நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மூன்று இளைஞர்களும் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.