தரம் உயர்த்தப்படும் யாழ் போதனா வைத்தியசாலை!

  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இதன்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.