காற்றின் வேகம் தொடர்பில் எச்சரிக்கை!

  சீரற்ற காலநிலை காரணமாக மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த எச்சரிக்கை நாளை (25) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.