மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் ஈழத்தமிழ் யுவதி!

யாழ்ப்பாணம் தீவு பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமி யுவதியான கிளாரா பத்மஸ்ரீ ‘மிஸ் பாரிஸ் 2024’க்காக போட்டி இடுகிறார். கிளாரா பத்மஸ்ரீ யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்விகமாக கொண்டவராவார்.

‘மிஸ் பாரிஸ் 2024’ போட்டியில் , இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள 10 பேரில் கிளாரா பத்மஸ்ரீ ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் வெற்றிவாகை சூடவேண்டும் என கிளாராவுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

அவர் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இன்று வரை பிரான்ஸ் மக்கள் வாக்களிக்க முடியும். இதில் வெற்றி வெற்றால், இல் து பிரான்ஸ் போட்டிக்கு அவர் தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.