மதுக் கடையில் பறிபோன உயிர்!

  மதுக்கடை ரிமையாளர் , ஊழியரால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபில பொலிஸாருக்கு நேற்று (30) காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுக்கடையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவராவார்.

உயிரிழந்தவர் மதுபானக்கடை ஒன்றை நடத்திவருவதாகவும், ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் , ஊழியர் இரும்பு கம்பியால் தாக்கி கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.