பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்!

  வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட முயன்றதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, வாதுவை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வாதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தருடன் பெண் சண்டை

பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்றபோது, பொலிஸ் உத்தியோகத்தருடன் பெண் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேக நபரை சுற்றிவளைத்துப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.