யாழ் ஆலய கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட இளம் பெண்!

யாழ். ஊர்காவற்றுறை – புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்றையதினம் (04-06-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.