வவுனியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட 24 வயதான இளம் பெண் கைது!

வவுனியாவில் 24 வயது இளம் பெண்ணொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றையதினம் (04-06-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான பொலிஸார் வவுனியா, தோணிக்கல் பகுதியில் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையின்போது விற்பனைகதகாக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.

இதன்போது குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.