குழவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள்!

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் குழவிக் கொட்டுக்கிலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக காற்று வீசி வரும் நிலையில், குழவிக்கூட்டிலிருந்த குழவிகள் கலைந்து வந்து இவ்வாறு மாணவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழவிக் கொட்டுக்கிலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.