மயிலை வேட்டையாடி புசித்தவர்களை தேடும் பொலிசார்!

மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் மயிலொன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து உட்கொண்ட வெளிநாட்டவர் ஒருவர் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 2019 அல்லது 2020 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு முன்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

காணொளியால் அதிர்ச்சி

வேடுவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் மயிலை புசித்ததாக கூறப்படுகின்றது.

இந்த காணொளியை 80 இலட்சம் பேர் பார்வையிட்ட நிலையில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து ஹெனானிகல வனவிலங்கு தள பாதுகாப்பு அதிகாரி டபிள்யூ.எம்.குமாரசிறி விஜேகோன் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

 இலங்கையில் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ள மயில், வில் மற்றும் அம்பு பயன்படுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டுள்ளது.

ஆதிவாசிகளான வேடுவர் சமூகத்தின் பாரம்பரிய முறைப்படி வேட்டையாடப்பட்ட மயில் வறுக்கப்பட்டு தேனில் தோய்த்து உட்கொண்ட காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.