லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

நாட்டில் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக  லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், நேற்றையதினம் (09-07-2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையின் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதன்முறையாக முட்டை மீதான வற் வரியை அரசாங்கம் நடைமுறையாக்கியமையால் பெருமளவில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.