யாழில் 4 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்…!



யாழில் திடீர் சுகயீனம் காரணமான 4 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த ரஸ்மிகா (வயது4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

நேற்றய தினம் காலை சிறுமிக்கு திடீர் சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுமியின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது