பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் குறித்த தேவாலயத்திற்குச் சென்றுள்ள நிலையில் பூஜை ஒன்று நடத்துவதற்கு வருமாறு அங்கருத்து பூசகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணை
இந்நிலையில், குறித்த பூசகர. பூஜை நடத்தச் செல்ல மறுத்ததால் சந்தேக நபர்கள் இருவரும் அவரையும் அவரது மனைவியையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் சந்தேக நபர்கள் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.