யாழ். காங்கேசன்துறையில் 344 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

காங்கேசன்துறை பகுதியில் 344 கிலோ 560 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (07.12) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

இந்தியாவிலிருந்து கடல் வழிப்பாதை மூலமாகக் கஞ்சா கடத்தி வருவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 344கிலோ 560 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகளுடன் மூவர், காங்கேசன்துறை கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை பொலிஸில் கையளிக்கப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.