உயர்தர, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்தி வையுங்கள்!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.