கிளிநொச்சி சேவைச் சந்தையில் ஏழுபேருக்கு கொரோனா!

கிளிநொச்சி மாவட்டம் சேவைச் சந்தையில் கடந்த இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 317 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை நேற்று 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 02 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் சேவைச் சந்தையைத் திறந்து விடுவது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் சுகாதாரத் தரப்புடன் கலந்துரையடிவருவதாகவும் கூறப்படுகின்றது.

சேவைச் சந்தையில் சேவை பெறுவோர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் சேவைச் சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.