யாழில் சாலையோரமாக யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் யாழ் நகரப் பகுதியில் யாசகம் செய்பவர் என தெரிய வந்துள்ளது.

முதியவர் இருதய நோய் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பொலிசாரினால் முதியவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் மரண விசாரணை இடம் பெறவுள்ளது.