சாவகச்சேரியில் எழுமாற்று பரிசோதனை: 18 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர்ப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 100 பேரிடம் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொடிகாமம் ஆயுர்வேத வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.