இன்றிரவு 8.30 மணிக்கு மற்றுமோர் அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இதன்போது , முக்கியமான அறிவிப்பொன்றை மக்களுக்கு வெளி விடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் , நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்குத் தெளிவுப்படுத்துவார் என அறியமுடிகின்றது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படும் நிலையில் அது பற்றிய விளக்கத்தை ஜனாதிபதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.