யாழில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கிணற்றில் தவறி விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழ்துள்ளார்.

இந்த சோக சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில், சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

இதன்போது வீட்டிலிருந்து தோட்டத்துக்கு நடந்து சென்ற சிறுவன் கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.