ரம்புக்கனை – கொடவெஹெர ரஜமஹா விகாரையில் இருந்து 5 தங்க கலசங்கள் மற்றும் 3 பளிங்கு கலசங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாகட் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் சனிக்கிழமை (12-02-2022) குறித்த கலசங்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனுதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தொல்பொருள் திணைக்களத்தினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பரிசோதனைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.