யாழின் குருநகர் பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு….!

யாழில் எரிவாயு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழின். குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் சமையல் எரிவாயு அடுப்பானது அணைக்கப்பட்டிருந்த நிலையிலும் வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது அருகாமையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.