யாழில் பிரபல உணவகம் ஒன்றில் இப்படியா பிரியாணி? அதிர்ச்சியில் வடிக்கையாளர்!

யாழில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் அந்த உணவகத்தில் பிரியாணி ஓடர் செய்துள்ளார்.

இதன்போது அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் ஆணி ஒன்று இருந்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ள நிலையில், அந்த உணவகத்தில் வழங்கப்பட்டது பிரியாணியா? அல்லது பிறீ (free) ஆணியா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளதுடன், குறித்த உணவகத்தின் மெத்தனம் தொடர்பில் விசனங்களையும் வெளியிட்டுள்ளனர்.