இராணுவ வீரரால் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை!



அனுராதபுரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கல்னேவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியின் இடது கையை கடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று சனிக்கிழமை (19-02-2022) மாலை இசை நிகழ்ச்சியை காண ஹிரிபிட்டியாவ பொது மைதானத்திற்கு சென்றிருந்தவர்களில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலை சமாதானம் செய்ய சென்ற போதே இராணுவ வீரர், பொலிஸ் அதிகாரியை கையை கடித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி கல்னேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரரும், பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹோமாகமை பிரதேசத்தை இந்த சந்தேக நபர், இலங்கை இராணுவத்தின் அரலகங்வில இராணுவ முகாமில் பீரங்கி படைப்பிரிவில் சேவையாற்றி வருகிறார்.