இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் !




எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

எனினும் அதில் , இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது 75% பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் மீதமுள்ள 25% இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளிடமிருந்து கொள்வனவுகளை மேற்கொள்ளப் பயன்படுத்தலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.