சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து வீடு திரும்பிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்!


சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிதபோது கினிகத்தேனையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கினிகத்தேனை நகருக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிந்து திஸார எனும் வயது 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு கற்குகையில் இறுகியதன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தினை கெனில்வேத் தோட்ட மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டு பிரேத பரிசோதனைககாக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.