யாழ்.நல்லூரில் ஐ.நா அலுவலகம் முன் வெடித்த போராட்டம் : ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மை எரிப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழ்.நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை சிவில் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறியே மேற்படி கவயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிளவில் நல்லூர் கைலாய பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

அதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன்

அமைச்சரின் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினர். போராட்டத்தின் நிறைவில், போராட்டக்காரர்கள் ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர்.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.