யாழில் கவனம் ஈர்த்த முன்பள்ளி மாணவன்!

யாழில் சிறுவர் முன்பள்ளி ஒன்றில் விளையாட்டுப்போட்டியொன்றில் வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவச் சிறுவர் ஒருவரின் செயல் சமூகவலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டுவதாக போட்டியில் பங்கேற்ற மாணவனின் செயல் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி ஒன்றில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.