யாழில் இப்படியும் ஒரு சம்பவம் நிகழ்ந்து வருகின்றது : பெரும் அவதிக்குள்ளான நடுநிலை குடும்பத்தினர்!

சில தினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்ற பெண் நீண்ட நேரம் ஆனதால் ஊர்காவற்றுறைக்கு செல்வதற்காக முச்சக்கரவண்டியிடம் விலை கேட்டுள்ளார்.

அதற்கு அவர் அங்கு செல்வதற்கு 11ஆயிரம் என்றதும் அதிர்ச்சியுற்றார் இதனால் 1500 ரூபா கொடுத்து மாட்டின் வீதிக்குச் சென்று உறவினர் வீட்டில் தங்கி மறுநாள் பேருந்தில் சென்றுள்ளார்.

யாழிலிருந்து ஊர்காவற்றுறைக்கு செல்வதற்கு அரை மணி நேரம் மட்டும் ஆகும் இது இவ்வாறிருக்க முன்பு யாழ் நகருக்குள்ளே பயணிப்பதாயின் 3 இலக்கங்களில் பணம் அறவிட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தற்போது 4 இலக்கங்களில் கேட்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ் நகர முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் தம்மிடம் பெற்றோல் தட்டுப்பாட்டை காரணம் கூறி பெருமளவு பணத்தை வாங்கி வருகிளன்றனர் எக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.