யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் : வெளியான காரணம்!

இலங்கையின் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ஜோசப் ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து யாழில் ஆசிரியர்கள் கவணஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டங்களானது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, உரும்பிராய் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை உள்ளிட்ட பல பாடசாலைகளின் முன்பாக ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை ரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,கொழும்பு கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளது.

மேலும் குறித்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது..