யாழில் பதின்ம வயது சிறுமியை சீரழித்த தாய்!

போதைப்பொருள் விற்பனைக்கு தாயினால் பயன்படுத்தப்பட்ட இளம்பெண் ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

. இந்தச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.