கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை!

அனுராதபுரம் – கட்டுகெலியாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய உதித ஏரன்ன ஜயதிலக் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் லோலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் நேற்றிரவு தனது மனைவி வீட்டில் தங்கியிருந்த நிலையில் தனக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பேரில் வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சில சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.