யாழில் தேர் திருவிழாவில் 15 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் இருந்து சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று தேர் திருவிழா நடைபெற்ற நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் பக்தர்களுடன் கலக்கிய திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 7 பேர் புகார் அளித்துள்ளனர்.